மனைவியை மிரட்ட பிளேடால் கழுத்தை

அறுத்தவர் பரிதாப பலிதிருச்சி, அக். 10: திருச்சி உறையூர் நாச்சியார் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார்(48). சென்ட்ரிங் தொழிலாளி. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த 3ம் தேதி, போதையில் வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை மிரட்டுவதற்காக பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். ரத்தம் பீறிட அலறி துடித்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: