திருச்சி, அக்.10: பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக குடிநீர் வீணாகிறது. திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாய் பதிக்கப்பட்டிருக்கும் தெருவில் கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.