தஞ்சை, அக். 10: தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்துக்கு 2018- 19ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்துள்ளது. இந்நிலையில் பயிர் காப்பீட்டுத்தொகை விவசாயிகள் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை. மேலும் ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் பல பகுதிகளில் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் பல விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது.