ஜெயங்கொண்டம், அக். 10: ஜெயங்கொண்டம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (25). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கசாமி மகன் சக்திவேல் (27) என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோத தகராறு இருந்து வந்தது.