கோவை அக், 10 :கோவை சாய்பாபா காலனியில் ராம்ராஜ் காட்டன் 101வது கிளை திறக்கப்பட்டது. இதனை முன்னாள் மாநகராட்சி மேயர் வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். கார்த்திக் - வளர்மதி தம்பதிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். வெற்றி தமிழ்ப்பேரவை உறுப்பினர் சுகுமார், வேளாண்மை பேராசிரியர் ஆசிப் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். இது குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறுகையில், ‘இந்த ராம்ராஜ் காட்டன் கிளையில் வேட்டி ரகங்கள், சுபமுகூர்த்த வேட்டி, எம்பிராய்டரி வேட்டி பட்டு வேட்டி, என வேட்டி ரகங்கள், எம்பிராய்டிங் சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்டுகள் மேட்சிங் என ரகங்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இளைஞர்களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் இங்கு ஆடைகள் கிடைக்கும்’ எனக் கூறினார்.