தென்காசி, அக். 10: ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அமர்சேவா சாரதாம்பாள் ஐடிஐ துவக்க விழா நடந்தது. அமர்சேவா சங்க செயலாளர் சங்கர ராமன் வரவேற்றார். அலுவலக மேலாளர் நீலகண்டன் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து ஐடிஐயை திறந்து வைத்து பேசினார். மேலும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி புத்தகத்தை வழங்கினார்.