கூடுவாஞ்சேரி, அக். 10: வண்டலூர் அருகே, சிறுவர்கள் சாப்பிடும் தின்பண்டங்கள் இருந்த குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் சண்முகா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (32). அதே பகுதியில் சிறுவர்கள் சாப்பிடும் தின்பண்டங்களுக்கான குடோன் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்ததும் சத்தியநாராயணன், குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.சிறிது நேரத்தில் குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சத்தியநாராயணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.