கடலூர், அக். 10: கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்தவர் சம்பத் (70). ஓய்வுபெற்ற நகராட்சி அலுவலர். இவரது மனைவி விஜயலட்சுமி (63). கடந்த 5ம் தேதி மதியம் 12 மணிக்கு சம்பத்தின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.மறுமுனையில் பேசிய நபர், தான் தேசிய வங்கி அதிகாரி என்றும் சம்பத்தின் வங்கி கணக்கு பிளாக் ஆகிவிட்டது. அதனை சரி செய்வதற்கு வங்கி எண், ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை உடனே தெரிவிக்குமாறும் அதட்டல் குரலில் பேசி விவரங்களை பெற்றுள்ளான்.அப்போது அருகில் மனைவி விஜயலட்சுமி இருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம ஆசாமி, அவரிடமும் நைசாக பேசி அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுள்ளான்.