கீழக்கரை, அக்.9: கீழக்கரை ஹமீதியா தொடக்க, மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய், சவுதி போன்ற வெளிநாடுகளில் தொழில் செய்து வரும் முன்னாள் மாணவர்கள் கீழக்கரையில் வந்து பங்கேற்றனர்.மஜீத் சலீம் தலைமை வகித்தார். வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முகம்மது மற்றும் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் சதக் இலியாஸ் வரவேற்றார். இதில் சதக் இலியாஸ் பேசுகையில், இந்த பள்ளி 1870ல் ஹமீதியா மதார்ஸாவாக தொடங்கப்பட்டு 1938ல் அங்கீகாரம் பெற்ற பள்ளியாக மாறியது.