பாஸ்போர்ட்டிற்காக போலி ஆவணம் தயாரித்தவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கோவை, அக்.4:கோவையில் பாஸ்போர்ட்டிற்காக போலி ஆவணம் தயாரித்த வழக்கில் கைதானவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவையில் இலங்கை அகதிகள் மற்றும் வாலிபர்களுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கோவை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரித்த கியூ பிரிவு போலீசார் கோவை, கணபதியை சேர்ந்த ரகுபதி (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவை மற்றும் பல பகுதிகளில் உள்ள வாலிபர்கள் 6 பேருக்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை வரும் 17ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரகுபதியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: