மதுரை, அக். 4: மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்டோருக்கு 13 ஆயிரம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இலவச தேய்ப்பு பெட்டி மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தையல் இயந்திரம் பெறுவதற்கு 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.