அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்

மதுரை, மே 17: மேலூர் அருகேயுள்ள அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மேலூர் தாலுகா அம்பலக்காரன்பட்டியில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதோர் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரூ150 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை. விருப்பமுள்ளோர் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பாலிடெக்னிக் முதல்வர் (பொ) கூறியுள்ளார்.

The post அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: