வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை அரசு மருத்துவமனை டீன் தகவல்

 

மதுரை, மே 20: வைரஸ் காய்ச்சலுடன் வரும் ஒவ்வொருவருக்கும் தீவிர பரிசோதனைக் நடத்தி, விரைவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று மதுரை அரசு மருத்துமவனை டீன் (பொறுப்பு) தர்மராஜ் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், குழந்தைகளுக்கும் தனி சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் டீன் (பொறுப்பு) தர்மராஜ் கூறும்போது, ‘‘பொதுமக்களுக்கு எந்த வகையான வைரஸ் காய்ச்சல் அறிகுறியாக இருந்தாலும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது. மழைகாலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, காய்ச்சல் பாதித்த அனைவருக்கும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுடன் வரும் ஒவ்வொருவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி, விரைவான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை அரசு மருத்துவமனை டீன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: