தஞ்சை, அக். 4: தஞ்சை கீழராஜ வீதியில் மாவட்ட இடதுசாரி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், “ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 18,000 என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின்கீழ் வேலை நாட்களை 200ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியிலிருந்து மீள ஒருமுறை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.