காஞ்சிபுரம், அக்.2: சுங்குவார்சத்திரம் அருகே பிரம்மா குமாரிகளின் சார்பில் முதியோர்களை போற்றும் நிகழ்ச்சி நடந்தது. பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் முதியோர்களை போற்றும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூரில் உள்ள ஹேப்பி வில்லேஜில் நடந்தது. பிரம்மா குமாரிகள் இயக்க தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா தலைமை தாங்கினார். மூத்த சகோதரி கலாவதி வரவேற்றார். ஐக்கிய நாடுகளின் சார்பில் முதியோர் தினமாக நேற்று (அக்.1) முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, முதியோர் தினத்தை மூத்த குடிமக்களை மதிக்கும் நிகழ்ச்சியாக பிரம்மா குமாரிகள் இயக்கம் கொண்டாடுகின்றது.இந்நிலையில், பிரம்மா குமாரிகளின் சிறப்பு பயிற்சி மையம் அமைந்துள்ள சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ள ஹேப்பி வில்லேஜ் வளாகத்தில் முதியோர்களை மகிழ்வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.