கும்மிடிப்பூண்டி, அக். 2: சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு கும்மிடிப்பூண்டியில் கே.எஸ்.விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாவதி, குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், வட்டார திட்ட உதவியாளர் லில்லிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தோஷ் மேரி வரவேற்றார்.