தொண்டாமுத்தூர், அக்.1: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ேகாவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இக் கோயில் செயல் அலுவலர் பொறுப்பில் இயங்கி வந்தது. அதன்பின், 1998ம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு உதவி ஆணையர் ரேங்கில் தரம் உயர்த்தப்பட்டது. 2011ம் ஆண்டு இக்கோயிலுக்கான உதவி ஆணையராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக கோயிலில் கண்காணிப்பாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.