கும்மிடிப்பூண்டி, செப். 30:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கவரைப்பேட்டையில் நடக்க உள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், கவரைப்பேட்டை ஜி.என்.டி சாலையில் அமைந்துள்ள சாய்நிவாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமையில் நடக்கவுள்ளது. இதற்கு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்கிறார். கீழ்முதலம்பேடு ஊராட்சி செயலாளர் கே.ஜி.கோபால் நன்றி கூறுகிறார். இக்கூட்டதிற்கு, மாநில, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகிகளான க.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஓ.ஏ.நாகலிங்கம், சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.