கடலூர், செப். 26: தீபாவளிபண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தீபாவளி திருநாளன்று பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக சமர்ப்பிக்க அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வெளியிடப்பட்டு, வரும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக கடந்த 31ம் தேதி வரை பெறப்பட்டது.வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று இணையவழியாக விண்ணப்பம் செய்ய வருகிற 28ம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கால நீடிப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு வணிகர்கள், விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.