சென்னை விமான நிலையத்தில் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் வசந்தகுமார் எம்.பி வலியுறுத்தல்

நாகர்கோவில், செப்.26: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் வசந்தகுமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜரின் திருவுருப்படத்தை காணவில்லை. பன்னாட்டு விமான நிலையத்தில் அறிஞர் அண்ணாவின் புகைப்படமும், உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜரின் புகைப்படமும் ஒரே நேரத்தில் வைக்கப்பட்டது.இந்த நிலையில் இப்போது காமராஜர் புகைப்படத்தை மட்டும் காணவில்லை. உடனே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு காணாமல் போன காமராஜர் திருவுருப்படத்தை பயணிகள் வருகை தரும் இடத்தில் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: