நாமக்கல், செப். 25: அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்லாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீதம் (அதிகபட்ச மானியம் ₹25 ஆயிரம்) மானியம் மற்றும் கடன் தொகையில் இருசக்கர வாகனம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் மகளிருக்கு அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது, மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலையிலான அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் பெறுவதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.