திருவில்லிபுத்தூர், செப். 25: திருவில்லிபுத்தூர் அருகே பி.ராமசந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகு தெய்வேந்திரபுரம் வடக்குத் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பி.ராமசந்திராபுரம் ஒன்றாவது வார்டில் உள்ள அழகு தெய்வேந்திரபுரம் வடக்குத் தெருவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாகின. இத்தெருவிற்கு சிமெண்ட் தளம், வாறுகால், தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான அடிப்படை வசதியும் இதுநாள் வரை செய்து தரப்படவில்லை.