தஞ்சை, செப். 25: தஞ்சை ராஜீவ்நகரில் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தஞ்சை- நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகே ராஜீவ் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இச்சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.