பெரம்பலூர்,செப்.24:சிறப்புப் பொருளாதாரம் அமைக் காததால் அதற்காகக் கொடுத்த நிலங்களை திருப்பித்தர வலியுறுத்தி, 9 கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. அப் போது பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் அளித்த உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக, திருமாந்துறை, கீரனூர், லப்பைகுடிகாடு, பென்னகொணம், பெருமத்தூர், பெ.நல்லூர், மிளகா நத்தம், எறையூர், அயன்பேரையூர் என 9கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் 100க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக் டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவ ர்கள் கலெக்டர் சாந்தாவி டம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்தி ருப்பதாவது :எங்களுக்குச் சொந்தமான நிலத்தை 12ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பொரு ளாதார மண்டலம் அமைப் பதற்காக ஜிவிகே நிறுவ னத்திற்காக, அன்றைய அரசாங்கத்தால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு எங் களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி சிறப்பு பொருளாதார மண் டலம் அமைப்பதற்காக நிலத்தை கொடுத்ததால் வீட் டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு, வீட்டுமனை ஒன் று தருவதாக மோசடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.