சாயல்குடி, செப். 20: ராமநாதபுரத்தில் அரசின் பணி நெருக்கடிகளை கண்டித்து ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும், இவற்றை கைவிடக் கோரியும், மாவட்ட அளவிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சோமசுந்தர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார்.