ஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 4 மாதத்திற்கு பிறகு நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகரில் 180 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடிகளும், 92 வீடுகள் கொண்ட தரைதளத்துடன் கூடிய 3 அடுக்குகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் கடந்த 2017ம்ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை இந்த ஆண்டு மே 9ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.