சீர்காழி அருகே மேலையூரில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

சீர்காழி, செப்.20: சீர்காழி அருகே பூம்புகார் தீயணைப்பு நிலையம் சார்பில் மேலையூர் காவிரி ஆற்றில் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடு ஏற்படும் காலங்களில் பாதிக்கபட்டவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் வீரர்கள் மழைகாலங்களில் ஆற்றில் அடித்து செல்லப்படும் நபர்களை எப்படி மீட்பது குறித்து பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி செயல்விளக்கம் செய்து காட்டினர். இதனை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர்.

Related Stories: