மாயாகுளத்தில் இடையூறாக மின்கம்பம்

கீழக்கரை, செப்.19:  மாயாகுளத்தில் வீட்டிற்குள் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியில் ஒரு வீட்டிற்குள் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டால் மின் ஊழியர்கள் சரி செய்வதற்கு முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மின்வாரியம் உடனடியாக வீட்டிற்குள் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மின்கம்பம் வீட்டிற்குள் இருக்கின்றது. இதனால் மின் ஊழியர்கள் பழுதுபட்டதை நீக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மின்வாரியத்திற்கு பலமுறை மனு அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: