தொண்டி, செப்.19: மங்கலக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் திருவாடானை தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால், தன்னை 6 மாதத்திற்கு தாசில்தாராக நியக்க கலெக்டரிடம் இளைஞர் மனு கொடுத்தார்.
தொண்டி அருகே உள்ள மங்கலக்குடியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மனு கொடுத்த கீழகுடியை சேர்ந்த வினோகர் என்ற இளைஞர் கலெக்டரிடம் அளித்த மனுவில்,