விராலிமலை, செப். 19: விராலிமலை மற்றும் இலுப்பூர் அருகே தாண்டீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில்களில் குருபூஜை விழா நடந்தது.விராலிமலை சந்தை திடல் அருகில் வன்னி மரத்தடியிலும், அன்னவாசல் அருகில் உள்ள தாண்டீஸ்வரத்தில் தாண்டி மரத்தடியிலும் சத்ரு சம்ஹார மூர்த்தி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில்களில் நடைபெறும் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு விராலிமலை தெப்பகுளத்தில் இருந்து மங்கள இசையுடன் தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதேபோல் வன்னி மரத்தடியில் உள்ள ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து சத்ரு சம்ஹார மூர்த்தியின் உருவ படம் அலங்கரிக்கப்பட்டு விராலிமலை முக்கிய வீதியின் வழியே வலம் வரும் நிகழச்சி நடந்தது. இதேபோல் இலுப்பூர் அருகே தாண்டீஸ்வரத்தில் குருபூஜை விழா நடந்தது. மாலை சுவாமி வீதியுலா நடந்தது.