சோளிங்கர், செப். 19: சோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சோளிங்கர் கொண்டபாளையம் பகுதியை ேசர்ந்தவர் இந்திரா(41). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென இந்திராவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பைக் ஆசாமிகளை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.