திண்டுக்கல், செப். 17: முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக வழங்கவில்லையென கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளோடு மூதாட்டிகள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் அடுத்த ஏ.வெள்ளோடு, செபஸ்தியார் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்ெதாகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தி விட்டனர்.