திருவள்ளூர், செப். 17: ஆவடி பஸ் நிலையத்தில் பெயர் பலகையை மறைத்து, 100 மீட்டர் விளம்பரம் வைத்துள்ளதால், பஸ் நிலையம் இருளில் உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி புகார் மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:
பெரும்புதூர் தொகுதி எம்பியாக 1999 முதல் 2009 வரை இருந்தேன். அப்போது, 1999-2000 நிதியாண்டில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஆவடியில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக மேற்கூரை, சிமென்ட் கான்கிரீட் தரை, நடைமேடையுடன் பஸ் நிலையம் கட்டித்தந்தேன். இதை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.