அரியலூர், செப். 17: ஓசோன் தினத்தையொட்டி அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், வினாடி வினா போட்டி நடந்தது.
உலகம் முழுவதும் ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஓசோன் தினமான நேற்று அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல்துறை சார்பில் மாணவர்களுக்கு ஓவியம், வினாடி- வினா, பேச்சு போட்டிகள் நடந்தது. முன்னதாக சுற்றுச்சூழல் மாணவர்கள் எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்கெடுப்பது குறித்து கல்லூரி முதல்வர், சுற்றுச்சூழல் தலைவர் அருள் விளக்கினர்.