தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை கலெக்டர் அண்ணாதுரை பெற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து கலை பண்பாட்டுத்துறை சார்பில் 10 கலைஞர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம் இலவச இசைக்கருவிகள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் காசோலை, தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகம் மூலம் முதல்வரின் விபத்து நிவாரணத்தொகை திட்டத்தின்கீழ் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.