குமரியை சேர்ந்த 4 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு

நாகர்கோவில், செப்.15 : காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில், முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடம்  தமிழகம் முழுவதும் 100 போலீசார் முதலமைச்சர் பதக்கத்தை பெறுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் முதலமைச்சர் விருதுடன் பரிசு தொகையும் பெறுகிறார்கள். தக்கலை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராதா, குளச்சல் கடலோர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வி. சுரேஷ்குமார், நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் முதலமைச்சர் பதக்கத்துடன், ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் பெறுகிறார்கள். நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் எஸ்.என். குமார் முதலமைச்சர் பதக்கத்துடன், ரூ.5 ஆயிரம் பரிசு தொகை பெறுகிறார். முதலமைச்சர் பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: