சாயல்குடி, செப். 15: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் 1957ம் ஆண்டு தவசியாண்டி, ஜெகநாதன், சிவமணி, சித்திரவேல், முத்துமணி ஆகியோர் போலீசாரால் சுடப்பட்டு இறந்தனர். இவர்களது நினைவு தினம், அக்கிராம மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது, நேற்று நடந்த 62ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கீழத்தூவல் தேவ ர்சிலையிலிருந்து மவுன ஊர்வலமாக சென்று அவர்களது நினைவு தூணில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.