திருவாடானை, செப். 11: ,திருவாடானையில் இருந்து மங்கலகுடிக்கு சாலை அமைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்கலக்குடி செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குறிப்பாக மங்களக்குடி அருகே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இரண்டு வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல முள் செடிகள் வாகன ஓட்டிகளை காயப்படுத்தி விடுகின்றன.