கமுதி அருகே தம்பியை வெட்டிய அண்ணனுக்கு போலீஸ் வலை

கமுதி, செப். 11: கமுதி அருகே முன்பகையால் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல். சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது தந்தை அரியப்பன். இவருக்கு இரண்டு மனைவி ஆகும். மற்றொரு மனைவிக்கு நம்புவேல் (26) என்ற மகன் உள்ளார். இவர் மதுரையில் வேலை செய்து வருகிறார்.நம்புவேலுக்கும் அண்ணன் கந்தவேலுக்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குண்டுகுளம் கிராமத்திற்கு வந்த தம்பி நம்புவேலை, கந்தவேல் அரிவாளால் கைகளில் வெட்டினார். இதில் காயமடைந்த நம்புவேல் கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து கமுதி சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை தேடி வருகின்றனர்.

Related Stories: