தொண்டி, செப். 11: தொ ண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் 400க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இங்கு போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவர்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனர். கூடுதல் கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவகப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் 400க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். மாவட்டத்திலேயே அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி என்ற பெயரும் உண்டு. ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையிலும் முதலிடம் வகிக்கும் இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை. கடந்த வருடம் இங்கிருந்த ஓட்டுக் கட்டிடம் இடிக்கப்பட்டது. அனால் அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படவில்லை. அதிகமான மாணவர்கள் இருப்பதால் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் படித்து வருகின்றனர்.இந்த வருடம் அதிகமானோர் இந்த காரணத்திற்க்காக தனியார் பள்ளியை நாடி சென்றதாக தெரிகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பாடுபடும்போது இது போன்ற காரணங்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.