நாகை, செப்.11: நாகையில் நடந்த வாகன சோதனையில் இரண்டு மாதத்தில் மட்டும் 341 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாகை எஸ்.பி.ராஜசேகரன் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையின் போது, கடந்த மாதம் மட்டும் (ஆகஸ்ட்) 88 மது அருந்தி வாகனம் ஓட்டுதல், 91 வாகனத்தில் அதிக பாரம் எற்றுதல், 1114 பேர் அதி வேகத்தில் வாகனம் ஓட்டுதல், 876 கனரக வாகனங்களில் பயணிகளை ஏற்றுவது, 2,897 பேர் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுதல், 5,777 சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என மொத்தம் 61,028 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.