பைக்கில் இருந்து விழுந்த பெண் சாவு

திங்கள்சந்தை, செப். 11: கருங்கல்  அருகே பூவன்சந்தி பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவர் அப்பகுதியில்  மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரெஜி(49). இவருக்கு உடல்நிலை  சரியில்லாததால் கடந்த 5ம் தேதி ராபின்சன் தனது பைக்கில் மனைவியை  அழைத்துக்கொண்டு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர்  அவர்கள் வீட்டுக்கு திரும்பி ெகாண்டிருந்தனர்.சுங்கான்கடை  பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பைக்கின் குறுக்கே நாய் ஒன்று  பாய்ந்துள்ளது. இதில் நிலைதடுமாறிய பைக் கீழே விழுந்து இருவருக்கும் பலத்த  காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி   ரெஜி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர். ராபின்சன் தொடர்ந்து சிகிச்சை பெற்று  வருகிறார்.

Related Stories: