துறையூர், செப்.10: துறையூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் சிதலடைந்து கிடப்பதால் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அலுவலகம் பின்புறம் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 50 வருடத்திற்கு மேல் இருக்கும். தற்பொழுது இந்த அலுவலகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டைக்கு பதிவு செய்ய, பெயர் மாற்றம், முகவரி மாற்றுதல் அனைத்திற்குமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்ட வழங்கல் அலுவலக கட்டிடத்தின் ஓடுகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலத்தில் அதில் உள்ள ரெக்கார்டு பதிவேடுகள் அலுவலகத்தில் கணினி, பதிவேடுகள் நனைந்து வீணாகும் நிலைமையில் உள்ளது. காற்றில் ஓடுகள் உடைந்து விழுவதால் மழைநீர் சேகரிப்பு கட்டப்பட்ட தகடுகள், ஓடுகள் உடைந்து பராமரிப்பின்றி கீழே தொங்கி கொண்டிருக்கிறது.