திருவாரூர், செப். 10: திருவாரூரில் கடந்த 45 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பேருந்து நிலையமானது தற்போது விளமல் அருகே புதிதாக அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27 ந் தேதி திறந்துவைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் ரயில்வே மேம்பாலம் வழியாக பைபாஸ் சாலையில் செல்வதால் அந்த ரயில்வே மேம்பாலமானது தற்போது பேருந்து நிறுத்தமாக இருந்து வருகிறது.