கும்பகோணம், செப். 10: கும்பகோணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கனகசபை (85). இவர் காதி வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தமிழரசி (75). இவர்களுக்கு திருமணமான 3 குழந்தைகள் உள்ளனர். காமராஜ் நகரில் கனகசபையும், தமிழரசியும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதி தனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.69 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் கனகசபை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகத்துக்கு உரியவர்களை அழைத்து விசாரிக்கவில்லை.