தக்கலை, செப். 10: தக்கலை அருகே கோயிலுக்கு அழைத்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் உறவினர் மகளுக்கு,நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்காக துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக உறவினர்கள் அனைவரும் கடையாலுமூடு பகுதிக்கு வந்தனர். பின்னர் உறவினர் மகளான 10ம் வகுப்பு மாணவியை, தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த தொழிலாளி மட்டும் குமாரகோவில் முருகன் கோயிலுக்கு புறப்பட்டார். கோயிலுக்கு அருகில் உள்ள மலைக்கு செல்வோம் என கூறி மாணவியை அங்கு அழைத்து சென்ற அவர், திடீரென மாணவியிடம் அத்துமீறி அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.தொழிலாளியின் ெசய்கைகளால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தொழிலாளியின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி மலையின் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் ஓடி வந்தார். மாணவியை தொழிலாளி விடாமல் விரட்டி வந்தார். வேகமாக ஓடி வந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து பதுங்கினார்.