பெரும்புதூர், செப்.10: பெரும்புதூர் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பில் மழைநீர் சேகரிப்பு மரம், வளர்ப்போம், நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு பேரணி, பெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.பெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) சுமதி வரவேற்றார். ஜேஆர்சி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, வட்டார கல்வி அலுவலர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.