ராமநாதபுரம், ஆக.22: மண்டபம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அளவிலான சாரண சாரணிய மாணவர்களுக்கு மூன்று நாள் ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம், ராமநாதபுரம் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. முகாமை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தாளாளர் முகம்மது யூசுப், மாவட்ட சாரண சாரணிய ஆணையாளர் பரிமளா ஆண்டனி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மூன்று நாட்கள் நடைபெற்ற சோதனை முகாமை மாநில பயிற்றுநர்கள் எபினேசர், மஞ்சுளா ஆகியோர் நடத்தினர். இரண்டு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் என 20 பள்ளிகளிலிருந்து ராஜ்யபுரஸ்கார் விருது பெற விண்ணப்பம் செய்த 102 சாரண சாணியர்கள் பங்கேற்றனர்.