அரசு பள்ளியில் உலக மக்கள் தொகை தின கட்டுரை போட்டி

சாயல்குடி, ஆக. 22: சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மேலக்கிடாரம் அரசு பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கருத்தரங்கம், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் சான்று, பரிசளிப்பு விழா நேற்று மேலக்கிடாரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் ஜெர்சிமேரி தலைமை வகித்தார். சாயல்குடி ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். அக்னி சிறகுகள் நற்பணி மன்ற தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் தொகை பெருக்கமும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. வட்டார சுகாதார புள்ளியியலாளர் ராமபூபதி நன்றி கூறினார்.

Related Stories: