ராமநாதபுரம், ஆக.22: ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் இரண்டு வகுப்புகளும், குழந்தைகள் சத்துணவு மையம், அழகப்பா மாலை நேர கல்லூரி, எலைட் அரசுப்பள்ளி என 5 கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் சத்துணவு கூடம் அருகே குழந்தைகள் விளையாடும் இடத்தில் மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளது. சுகாதார கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ள குப்பைகளை அகற்ற பள்ளி நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், சின்ன குழந்தைகள் குப்பைகளில் உள்ள பொருள்களை எடுத்து விளையாடி கொண்டிருக்கின்றனர்.